

சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் தமிழ்நாடு கவர்னர் திரு.ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். கவர்னர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினருடன் நடராஜர் கோயிலுக்கு வருகை வந்தார்.
குடும்பத்துடன் வந்துள்ள கவர்னருக்கு தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். கவர்னர் வருகையை ஒட்டி, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவித்தனர்.