தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா கடலூரில் 21-ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா கடலூரில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா கடலூரில் 21-ந் தேதி தொடங்குகிறது
Published on

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கடலூர் கிளை அலுவலகத்தில் (இம்பீரியல் பிளாசா முதல்மாடி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, செம்மண்டலம், கடலூர்) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

50 சதவீத சலுகை

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூ மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com