தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம், கடந்த 2ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழக அரசு எல்லா நிலையிலும் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கஜா புயல் நிவாரண பணிக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை பெற முடியவில்லை.

ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்சனையிலும் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . விவசாயிகளை அழைத்து பேச தமிழக அரசு தவறி விட்டது என கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com