பிப்ரவரி 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..?
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை கவர்னர் முறையாக முடித்து வைக்கவில்லை. மேலும் கவர்னருக்கும் தமிழக அரசிற்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடர் கவர்னரின் உரையுடன் தொடங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com