

சென்னை,
காவிரி நதிநீர் பிரச்சினை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இந்த உத்தரவை மதிக்கமாட்டோம்; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடமாட்டோம் என கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கூறி வருகிறார்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்து, அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக அரசின் நீர்வளத் துறை செயலராக பிரசாந்த் எம்.வடநரே நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நீர்வளத்துறை புதிய செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வடநரே. இவர் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை. நீர்வளத் துறையை கவனித்து வந்த சத்யபிரதா சாகு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறி வந்தார். ஆனால் காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் திமுக இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த பின்னணியில் இன்று தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.