குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழர், ஈரான் தாக்குதலில் பலி - டிடிவி தினகரன் இரங்கல்

உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழர், ஈரான் தாக்குதலில் பலி - டிடிவி தினகரன் இரங்கல்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த செல்வம், ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com