ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ். இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (வயது 40). இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் தனது வீட்டில் மாணவ-மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று டியூசனுக்கு வந்த மாணவியிடம் சகாயம் டெவின்ராஜ் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சகாயம் டெவின்ராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com