மாணவிகளுக்கு பாலியல் தொல்லை;போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

சிவகங்கை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை;போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
Published on

சிவகங்கை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

சிவகங்கை அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழையூரை சேர்ந்த விநாயகசவுத்ரி (வயது 44) ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் விநாயக சவுத்ரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். பாலியல் தொல்லை குறித்து குழந்தைகள் நலக்குழு அலுவலர் முத்து கண்ணன் விசாரணை நடத்தினார்.

ஆசிரியர் கைது

பின்னர் அவர் சிவகங்கை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக சிவகங்கை துணைபோலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் விமலா ஆகியோர் விசாரணை நடத்தி, ஆசிரியர் விநாயக சவுத்ரியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com