விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

திருவண்ணாமலையில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

திருவண்ணாமலை மேல்பாலானந்தல் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி வனிதா (வயது 21). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் வனிதா கடந்த மாதங்களாக உடல் நல குறைபாட்டினால் அவதி அடைந்து வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்து அவர் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com