

ஆம்பூர் டவுன் போலீசார் கம்பிக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.