வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி திட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் தினமும் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேந்திரனை, மனைவி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com