திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

பாவூர்சத்திரத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியதாகவும், அவருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் முத்துக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com