பஸ் மோதி வாலிபர் பலி

தூசி அருகே பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பஸ் மோதி வாலிபர் பலி
Published on

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 55), விவசாயி இவரது மகன் ரங்கநாதன் (28),

இவர் இன்று மாலை மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம் -கலவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தூசியை அடுத்த நமண்டி கூட்ரோடு அருகே எதிரில் வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது

இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com