கடலூரில் வாகனம் மோதி வாலிபர் பலி

கடலூரில் வாகனம் மோதி வாலிபர் உயிழந்தா.
கடலூரில் வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

கடலூர் பாரதி சாலையில் சம்பவத்தன்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த வாலிபரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com