ரெயில் மோதி வாலிபர் பலி

அரக்கோணத்தில் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 17). இவர் நேற்று மாலை மோசூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தலைமையிலான போலீசார் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com