ரெயில் மோதி வாலிபர் பலி

கடலூர் முதுநகரில் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

கடலூர் முதுநகர்:

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் நிவேகுமார்(வயது 26). மீனவர். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புவனா(21) என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியில் உள்ள உப்பனாற்று ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், நிவேகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிவேகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேகுமார் நள்ளிரவில் எதற்காக வந்தார்?, ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com