செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா

செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா கொண்டாடப்பட்டது.
செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
Published on

கபிஸ்தலம் வடக்கு செங்குந்தர் தெருவில் உள்ள செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல், சக்தி கரகம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கடந்த 26-ந் தேதி துர்க்கா தேவி எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி, 27-ந் தேதி பச்சைக்காளி, பவளக்காளி எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி, 28-ந் தேதி காளிகாதேவி படுகளம் சுற்றி வல்லான் கோட்டைக்கு வருதல் மாங்கல்ய பிச்சை தருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கபிஸ்தலம் பகுதியில் காளியம்மன் திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் பால்குடம், பால்காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com