அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,200 பேருந்துகள் வாங்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,200 பேருந்துகள் வாங்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
Published on

கடலூர்,

கடலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com