

சென்னை,
தஞ்சாவூர் சிலிண்டர் விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், சின்ன அம்மங்குடி கிராமத்தில் 30.07.2026 அன்று காலையில் .முருகையன் த/பெ. சின்னையன் என்பவரது வீட்டின் கூரை வேய்ந்த சமையலறை கொட்டகை தீப்பற்றி எரிந்ததில், வீட்டினுள் இருந்த எரிவாயு சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததினால் ஏற்பட்ட விபத்தில், பலத்த தீக்காயமடைந்த பழனிவேல் (வயது-36), த/பெ. அப்புராசு, காசிநாதன் (வயது-39) த/பெ. வீரையன் மற்றும் வேம்பையன், (வயது-52) த/பெ. வீரையன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில், பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜசேகர் (வயது-32), த/பெ. செல்வராசு, செல்வி (வயது-41), க/பெ. முருகையன், அபிநயா, (வயது-15), த/பெ. முருகையன், கலையரசி, (வயது-39) க/பெ. வேம்பையன், புவனேஷ் (வயது-16), த/பெ. ரமேஷ் ஆகிய ஐந்து நபர்களுக்கும், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் செல்வராசு, (வயது-64), த/பெ. சின்னையன் என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஒரு 1 லட்சம் ரூபாயும், லேசான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு 50,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.