தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று நடக்கிறது

தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று நடக்கிறது
Published on

கரூர் தாந்தோணிமலையில் முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி கடந்த 2-ந்தேதி அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், யானை வாகனம், வேப்பமர வாகனம், புலி வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடந்து வருகிறது.

7-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று இரவு பகவதியம்மனுக்கு அமராவதி ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி, அலகு அழைத்து வந்து பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும் நடைபெற உள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com