

சென்னை,
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்கள் நலனே முக்கியமானது, 17 அமைப்புசாரா தொழிலாளர்கள்- 14 நலவாரியங்களைச் சேர்ந்த 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும்.
எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு வழங்கியதைப் போன்று ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைவருக்கும் சமூகக்கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும். ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும்.
போர்க்கால நடவடிக்கை
ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரிசெய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.