

சென்னை
தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரே மாதத்தில் 30 சதவீதம் வீழ்ந்த போதும் விலையை குறைக்காமல், மத்திய அரசு மீண்டும் கலால் வரியை உயர்த்தி பொதுமக்கள் மீது சுமையை திணிக்க இருப்பதாக பத்திரிகை செய்திகள் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.