மின்சார திருத்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் - மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மின்சார திருத்த சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மின்சார திருத்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் - மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2003-ம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது.

மேலும் இது மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால், இந்தச் சட்டத்திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com