“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி

நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். கடந்த 11-ந்தேதி பூபதிக்கும், மாணவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவி, இனிமேல் எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன் நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த 11-ந்தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னால் தான் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி மன உளைச்சலில் இருந்தார். நேற்று அதிகாலையில் மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com