

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் பரீட்சார்த்த முறையில் விருத்தாசலத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நெல்லையில் இருந்து சென்னை வரும்போது காலை 11.08 முதல் 11.10 வரையும், சென்னையில் இருந்து நெல்லை திரும்பும்போது மாலை 5.32 முதல் 5.34 வரையும் விருத்தாசலத்தில் நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது