

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இது அதிகாரிகளின் ஆட்சி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் வேலையாட்கள்தான் அதிகாரிகள். இங்கு அதிகாரம் இருப்பது மக்களுக்குதான். மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர்.
அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.