வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி - காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி - காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலக்கத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 17 கோடியே 39 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தடுப்பணையால் சுமார் 3 ஆயிரத்து 360 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6 கோடியே 82 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திருமங்கலம் 1-வது கால்வாய் சீரமைப்பு பணிகளையும் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com