

கோவை,
கோவையில் பணிபுரியும் ஒரு தூய்மைப் பணியாளர், காக்கைக்கு உணவு ஊட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உணவின்றி தவிக்கும் காகங்கள் பல இடங்களில் காணப்படும் நிலையில், அவற்றின் பசியை உணர்ந்து உணவு வழங்கும் இந்த செயல் அனைவரையும் உருகவைத்துள்ளது.
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இந்த செயலால் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன், சிறிய உதவியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.