குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டம் அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24 லட்சத்து 9 ஆயிரத்து 927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

அந்த வண்ணமே, இந்த ஆண்டும் நாடு தழுவிய வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நேற்று தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 25-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளி அருகில் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாச்சிப்பணிகள் துறையின் சார்பாக 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 1266 அங்கன்வாடி மையங்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 913 குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கிராம சுகாதார நர்சுகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த வைட்டமின் ஏ திரவம் உட்கொள்வதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாடுகளான மாலைக்கண், வறண்ட தோல், பார்வை குறைபாடு போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன.

எனவே, பெற்றோர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை பணியாளர்களுடன் இணைத்து அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா மற்றும் அரசு அலுவலர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com