அதிமுக - திமுக இடையேதான் போட்டி - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;
"தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. அது எந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் போட்டி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன்ஆட்சி அமைக்கும்.
முதல்வர் முக ஸ்டாலின் 5-வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த வெளிநாட்டு பயணங்களின் மொத்த விளக்கமும் வேண்டும். அதிமுக ஆட்சியின் போது முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழில் தொடங்கப்பட்டது போல் பொய் செய்தி பரப்புகின்றனர்.”
இவ்வாறு அவர் கூறினார்.






