

சென்னை,
நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மும்பை–அகமதாபாத் இடையேயான நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். சென்னை–பெங்களூரு, சென்னை–ஐதராபாத் உள்ளிட்ட வழித்தடங்களிலும் அதிவேக ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.