வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

மானாமதுரை

மானாமதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவன்-மனைவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது மனைவி முத்துமாரி(35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மாரிமுத்து கோவையில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊர் திரும்பிய அவர், ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அதேபோல் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவரது மனைவியும் சமீபகாலமாக வேலைக்கு செல்லவில்லை.

இதனால் குழந்தைகளை வளர்ப்பதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து முத்துமாரியின் தந்தை, 2 பேரையும் வேலைக்கு போகாமல் இருந்தால் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்று கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சென்றனர்.

விஷம் குடித்தனர்

அங்கு வேலை கிடைக்காத நிலையில் ஊருக்கு திரும்பினர். இந்தநிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் ஊருணி பொட்டலில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, மாரிமுத்துவை மதுரை அரசு மருத்துவமனையிலும், முத்துமாரியை சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

ஆனால் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துமாரிக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com