சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்
சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேகரையில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேகரை கிராமம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் சேகரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சேகரை, பொதக்குடி, பூதமங்கலம், மிளகுகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் இரண்டு பள்ளி கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பள்ளி கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியில் தரிகின்றன. எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலயில் உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டு, 3 தளம் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த கூத்தாநல்லூர் அருகே சேகரை பள்ளி கட்டிடத்த இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com