டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Published on

பெரம்பலூர் அருகே எளம்பலூர் டைட்டானிக் நகரை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 42). இவரது மனைவி அபிராமி(39). துரைராஜ் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அபிராமி பெரம்பலூ-வடக்கு மாதவி சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் வழக்கம்போல் துரைராஜூம், அபிராமியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து இருவரும் இரவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலி மற்றும் ரூ.29 ஆயிரத்து 500 ரொக்கம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com