கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

சாணார்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
Published on

சாணார்பட்டி அருகே உள்ள வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் விசுவராஜ் (வயது 58). விவசாயி. நேற்று முன்தினம் காலை இவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் விசுவராஜை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, அதேபகுதியில் உள்ள அவரது தோட்டத்து கிணற்றின் அருகே விசுவராஜ் அணிந்திருந்த கைலி கிடந்தது. இதனால் அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கருதினர். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 40 அடி தண்ணீர் இருந்த அந்த கிணற்றுக்குள் இறங்கி விசுவராஜை தேடினர். அப்போது அவர் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிணற்றுக்குள் தவறி விழுந்த விசுவராஜ், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com