அய்யலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

அய்யலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.
அய்யலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

அய்யலூர் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), விவசாயியான இவர், ஏர்பூட்டி உழவு செய்யும் வேலையும் செய்து வந்தார். இந்தநிலையில் ராமசாமி நேற்று அப்பகுதியில் உள்ள நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். பின்னர் மதியம் உணவு சாப்பிடுவதற்காக, ராமசாமி தனது தோட்டத்திற்கு சென்றார். அதன்பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் ராமசாமியை தேடி அவரது தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிணற்றுக்குள் ராமசாமி பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், ராமசாமி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com