புவனகிரி அருகே மனைவிக்கு 12 இடங்களில் கத்திக்குத்து கணவர் கைது

புவனகிரி அருகே கத்தியால் மனைவியை 12 இடங்களில் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
புவனகிரி அருகே மனைவிக்கு 12 இடங்களில் கத்திக்குத்து கணவர் கைது
Published on

புவனகிரி, 

புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 44). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா(40). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகளுக்கு திருமணமாகவில்லை. பிரேமா, கடந்த 7 மாதமாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரேமா சொந்த ஊருக்கு வந்திருந்தார். தீபாவளி முடிந்ததும் மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல பிரேமா தயாரானார்.

12 இடங்களில் கத்திக்குத்து

இதற்கு சாமிநாதன் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர், திருப்பூருக்கு செல்ல கூடாது என்று கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரேமாவை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

இதனால் நிலைகுலைந்து பிரேமா, கீழே விழுந்தார். கத்திக்குத்து ஏற்பட்ட இடங்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாமிநாதனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com