தனிச்சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்

தனிச்சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்
தனிச்சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்
Published on

மன்னார்குடி:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருவாரூர் மாவட்ட மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரசு தாயுமானவன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் பேசினார். கூட்டத்தில், சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு பின்பற்ற அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பிச்சைக்கண்ணு நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com