காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் - செல்வப்பெருந்தகை

காமராஜர் பிறந்தநாள் விழாவான இன்று கல்வித் திருவிழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- .

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுப் பணிக்கு தன்னை அர்ப்பணிப்பத்து, எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழாவான இன்று கல்வித் திருவிழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவோம்.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com