

திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலை பணிகளும், ஆற்றுப் பாலங்கள், ரெயில்வே பாலங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மைய அதிகாரி கேதண்டராமன் ஆய்வு செய்தார். வாணியம்பாடியில் இருந்து நிம்மியம்பட்டு - ஆலங்காயம் சாலை 3 கிலேமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்துவதை பார்வஐயிட்டு சாலையின் தடிமன், அகலம் ஆகியவற்றை சேதனை செய்தார். பின்னர் தண்டுக்கானுர், மட்றப்பள்ளி, புதூர்நாடு சாலைகளில் சிறுபாலம் அகலப்படுத்தும் பணியையும், ஆவாரங்குப்பம்-நாராயணபுரம் ஆற்றின் குறுக்கே நடைபெறும் பாலப்பணிகளையும் ஆய்வு செய்து, அதன் உறுதி தன்மையை கருவி மூலம் சோதனை செய்தார்.
மேலும் ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் ரெயில்வே கேட்டிற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் பேது திருப்பத்தூர் கேட்ட பெறியாளர் முரளி, வேலூர் திட்டங்கள் கேட்டப் பெறியாளர் சுந்தர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கேட்டப்பெறியாளர் தனசேகர், தரக்கட்டுப்பாடு கேட்ட பெறியாளர் ஞானவேல் மற்றும் உதவி கேட்டப்பெறியாளர்கள் உடன் இருந்தனர்.