மெரினா கடலில் மாயமான மாணவர்களை 5-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மெரினா கடலில் மாயமான மாணவர்களை 5-வது நாளாக தேடும் பணி தீவிரம்.
மெரினா கடலில் மாயமான மாணவர்களை 5-வது நாளாக தேடும் பணி தீவிரம்
Published on

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 17). இவர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடற்கரைக்கு செல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 23-ந்தேதி சபரிநாதன் தனது பள்ளி நண்பர்களான விமல், தர்மராஜன், சல்மான், சக்திவேல், ஆகாஷ் ஆகியோருடன் மெரினாவில் குளிக்க சென்றார்.

நண்பர்கள் 6 பேரும் குதூகலமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சபரிநாதன், விமல், தர்மராஜன் ஆகிய 3 பேரும் சிக்கி மாயமானார்கள். தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினரும் சம்பவ இடம் விரைந்து அலையில் சிக்கி மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் பணி நேற்று 5-வது நாளாக நீடித்தது. ஆனாலும், கடலில் மாயமான 3 மாணவர்களின் நிலை இதுவரை தெரியவில்லை. எனவே, அவர்கள் பற்றி தகவல் கிடைத்தாலோ, அவர்களது உடல் ஏதேனும் கடற்கரையில் ஒதுங்கினாலோ அதுகுறித்த தகவலை உடனே தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கடலோர காவல்படை போலீசாரிடம் அண்ணாசதுக்கம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com