ஓடையில் மூழ்கி தொழிலாளி பலி

ரிஷிவந்தியம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஓடையில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

வாணாபுரம், 

ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அன்பரசன் என்கின்ற அப்பு (வயது 33) கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அப்பு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள ஓடையில் அப்பு பிணமாக கிடந்தது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கை, கால்களை கழுவுவதற்காக ஓடைக்கு அப்பு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓடைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. தொடர்ந்து அப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com