சாராயம் விற்றவர் பிடிபட்டார்

சங்கராபுரத்தில் சாராயம் விற்றவர் பிடிபட்டார்.
சாராயம் விற்றவர் பிடிபட்டார்
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 57) என்பவர் அவரது காட்டுகொட்டாயில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமர் மீது வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com