வீடு புகுந்து நகை திருடியவர் கைது

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
Published on

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி பால சரசுவதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவில் கிடந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டின் அருகே நின்ற ஒருவர் தப்பி ஓடினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சம்பந்தப்பட்ட நபரை மடக்கி பிடித்தனர். அவரது கையில் பாலசரசுவதியின் 3 பவுன் தங்கச்சங்கிலி இருந்து உள்ளது. உடனடியாக அவரை தூத்துக்குடி சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்த செல்வ பெருமாள் மகன் அழகுராஜா (29) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அழகுராஜாவை கைது செய்து, அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com