சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை
Published on

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 55). கடந்த 2019-ம் ஆண்டில் இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது சம்பந்தமாக மதுரை தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஜான்சி ஆஜரானார். முடிவில் ராஜ்மோகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com