காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து மிரட்டியவர் கைது

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து மிரட்டியவர் கைது
Published on

போளூர்

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

போளூர் அருகே உள்ள அத்திமூர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). விவசாயி. இவரும் இளம் பெண் ஒருவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரபாகரன் அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம்பெண் பிரபாகரன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்யும்படி கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் பிரபாகரன் இளம் பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com