கொருக்குப்பேட்டையில் ரவுடியை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய கும்பல்

கொருக்குப்பேட்டையில் ரவுடியை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொருக்குப்பேட்டையில் ரவுடியை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய கும்பல்
Published on

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு எதிரில் உள்ள ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 33). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஜனார்த்தனன், கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நடந்து சென்றார். அப்பாது மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன அவர், தப்பி ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியது. இதில் ஜனார்த்தனின் 2 கைகள், முதுகில் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் ரத்தம் சொட்ட சொட்ட அலறியபடி மீண்டும் தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆர்.கே.நகர் போலீசார், பலத்த வெட்டுக்காயம் அடைந்த ரவுடி ஜனார்த்தனனை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக ஜனார்த்தனனை வெட்டினார்களா? இல்லை வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com