திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை பலி

திருமணமான 3 நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை பலி
Published on

புது மாப்பிள்ளை

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). கார் டிரைவரான இவருக்கு, அண்ணாநகர், செனாய் நகரை சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுடன் கடந்த 3 தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடத்தது.

புதுமண ஜோடிகளான இருவரும் செனாய் நகரில் உள்ள சோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்துக்காக வந்தனர். நேற்று முன்தினம் மணிகண்டன் தனது நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு இரவு மாமியார் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பலியானார்

செனாய் நகர், புல்லா அவென்யூ அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 3 நாட்களிலேயே மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com