மது பாட்டில்களை கடத்தியவர் கைது

திருத்தணியில் மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மது பாட்டில்களை கடத்தியவர் கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் திருத்தணி பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திருத்தணி - அரக்கோணம் சாலையில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் 135 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் திருத்தணி அக்கைய நாயுடு தெருவை சேர்ந்த சமியுல்லா (வயது 38) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 135 மது பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் சமியுல்லாவை கோர்ட்டில் ஆஜர் செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com