ராஜஸ்தானில் வாங்கிய ஒட்டகத்தை வைத்து சிவகங்கை ஆற்றில் மணல் கடத்திய நபர்

சிவகங்கை அருகே ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானில் வாங்கிய ஒட்டகத்தை வைத்து சிவகங்கை ஆற்றில் மணல் கடத்திய நபர்
Published on

சிவகங்கை மாவட்டம்,மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

சோதனை செய்த போது நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் வண்டியில் வந்தவரை கைது செய்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம், பல்லாக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பது தெரிய வந்தது.சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்ததாகவும், அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வந்ததும்,மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்ததுள்ளது.

லாரி, டிப்பர் ,டிராக்டர் ஆகியவற்றில் மணல் கடத்தலை கேள்வி பட்டிருப்போம் .ஆனால் இங்கு வித்தியாசமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com